தொழில் பெற இலஞ்சம் வழங்கினால் நடவடிக்கை; ஜனாபதி ஊடக பிரிவு எச்சரிக்கை
By: Nagaraj Wed, 02 Sept 2020 10:54:47 AM
அரச வேலைத்திட்டத்தின் கீழ் தொழில் பெறுவதற்காக எந்தவொரு நபருக்கும் இலஞ்சம் வழங்கக் கூடாது என்று ஜனாதிபதி ஊடக பிரிவு எச்சரித்துள்ளது.
இதுகுறித்து ஜனாதிபதி ஊடக பிரிவு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: தொழில் பெறுவதற்காக எவரும் பணம் இலஞ்சம் வழங்கினால் அவர்களுக்கு தொழில் வழங்கும் நடவடிக்கை நிராகரிக்கப்படும்.
குறைந்த வருமானம் கொண்ட குடும்பத்தினருக்கு ஒரு லட்சம் தொழில் வழங்கும்
வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
அரசாங்கத்தினால் செயலணி ஒன்று அமைத்து
வறுமையில் வாடும் குடும்பங்களின் பொருளாதாரத்தை அதிகரிக்கும் நோக்கிலேயே
இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது. இவ்வாறு
அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :
program |
bribery |
economy |