Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சமூகத்தில் பெண்கள் நிலைமை கொடூரமாக உள்ளது; நடிகை ராஷ்மிகா மந்தனா

சமூகத்தில் பெண்கள் நிலைமை கொடூரமாக உள்ளது; நடிகை ராஷ்மிகா மந்தனா

By: Monisha Wed, 14 Oct 2020 12:06:06 PM

சமூகத்தில் பெண்கள் நிலைமை கொடூரமாக உள்ளது; நடிகை ராஷ்மிகா மந்தனா

தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தற்போது தமிழில் சுல்தான் படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் சமூகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில்,

"எனக்கு தன்னம்பிக்கை அதிகம். ஒருவரின் அழகு தன்னம்பிக்கையில்தான் தெரியும். பாராட்டையும், விமர்சனத்தையும் ஒரே மாதிரி எடுத்துக்கொள்வேன். நான் சினிமாவுக்கு வந்து 10 வருடங்கள் ஆகிவிட்டன. நிறைய சவால்களை எதிர்கொண்டேன். அதை பார்த்து தளர்ந்து போகாமல் எப்படி மீண்டு வருவது என்று கற்றுக்கொண்டேன்.

telugu,women,rashmika mandana,self-confidence,cruelty ,தெலுங்கு,பெண்கள்,ராஷ்மிகா மந்தனா,தன்னம்பிக்கை,கொடுமை

எனக்கு மோசமான அனுபவங்கள் ஏற்படவில்லை. ஆனால் அதை சிலர் சந்தித்ததாக சொல்வதை கேட்கும்போது கஷ்டமாக இருந்தது. சமூகத்தில் பெண்கள் நிலைமை கொடூரமாக உள்ளது. ஒரு பக்கம் பெண்கள் நிறைய சாதிக்கிறார்கள். இன்னொரு பக்கம் பெண்களை மானபங்கம் செய்வதும் நடக்கிறது. புதிதாக ஹத்ராஸ் சம்பவம் நடந்துள்ளது.

இந்த ஆண்டு இதுபோல் நிறைய சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த கொடுமையில் இருந்து பெண்களை பாதுகாக்க வேண்டும். மாற்றம் ஒருவரால் சாத்தியமாகாது. எல்லோரும் சேர்ந்து மாற்றத்தை உருவாக்கினால்தான் முடியும். எனக்கு ஆன்மீக சிந்தனை அதிகம், மனது சரியில்லை என்றால் தியானம் செய்வேன்." இவ்வாறு ராஷ்மிகா கூறினார்.

Tags :
|
|