Advertisement

ஒகேனக்கலில் இன்று முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

By: Monisha Thu, 22 Oct 2020 5:33:07 PM

ஒகேனக்கலில் இன்று முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

ஒகேனக்கலில் இன்று முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று தர்மபுரி மாவட்ட கலெக்டர் மலர்விழி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக தர்மபுரி மாவட்ட கலெக்டர் மலர்விழி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பொதுமுடக்கத்தால் 7 மாதங்களாக மூடப்பட்டிருந்த ஒகேனக்கல் சுற்றுலா தலத்தில் இன்று முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படும். ஒகேனக்கல் அருவியில் இன்று முதல் குளிக்கவும், மசாஜ் செய்யவும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவர்.

சின்னாறு முதல் கோத்திக்கல், மெயின் அருவி வரை பரிசல் இயக்கவும் அனுமதி அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


Tags :