Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டாஸ்மாக்கில் 2 நாள்தான் விற்பனை... வசூல் ரூ.294 கோடி; மதுரையில்தான் அதிகம்

டாஸ்மாக்கில் 2 நாள்தான் விற்பனை... வசூல் ரூ.294 கோடி; மதுரையில்தான் அதிகம்

By: Nagaraj Sat, 09 May 2020 4:23:11 PM

டாஸ்மாக்கில் 2 நாள்தான் விற்பனை... வசூல் ரூ.294 கோடி; மதுரையில்தான் அதிகம்

2 நாள்தான் டாஸ்மாக்-ல் விற்பனை ரூ.294 கோடி கிடைத்துள்ளது. இதில் மதுரையில் அதிகளவு விற்பனை நடந்துள்ளது.

டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டிருந்த 2 நாட்களிலும் மொத்தம் 294 கோடி ரூபாயக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. மதுரையில் அதிக அளவு விற்பனையாகி உள்ளது.

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும், நாடு முழுவதும் கட்டுப்பாடுகளுடன் மதுக்கடைகளை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி பல்வேறு மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டு, விற்பனை விறுவிறுப்பாக நடைபெறுகிறது. பல்வேறு மதுக்கடைகளில் தனிமனித இடைவெளி பின்பற்றப்படுவதில்லை.

brewery,sales,2 days,rs 294 crore,madurai ,மதுபானங்கள், விற்பனை, 2 நாட்கள், ரூ.294 கோடி, மதுரை

தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் சென்னை தவிர பிற மாவட்டங்களில் மே 7ம் தேதி ‘டாஸ்மாக்’ மதுபான கடைகள் திறக்கப்பட்டன. 43 நாட்களுக்கு பின்னர் கடைகள் திறக்கப்பட்டதால் மது விற்பனை அமோகமாக இருந்தது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே மதுக்கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் முதல் நாளில் ரூ.172 கோடிக்கு மது விற்பனையானது. அதிகபட்சமாக மதுரையில் ரூ. 37 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டிருந்தது.

brewery,sales,2 days,rs 294 crore,madurai ,மதுபானங்கள், விற்பனை, 2 நாட்கள், ரூ.294 கோடி, மதுரை

இந்நிலையில் இரண்டாவது நாளான நேற்று 122 கோடி ரூபாய்க்கு மது விற்பனை ஆனதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. நேற்றும் மதுரையில் தான் அதிகபட்ச விற்பனை இருந்தது. மதுரையில் 32.45 கோடி ரூபாய்க்கு மது விற்பனை ஆகியிருந்தது.

தமிழகத்தில் 2 நாட்களில் மொத்தம் 294 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடந்திருக்கிறது. இதற்கிடையே டாஸ்மாக் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட், ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் எனவும், ஆன்லைனில் மதுபானங்களை விற்பனை செய்யலாம் என்றும் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|