Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • லெபனானில் ஏற்பட்ட வெடிவிபத்தில் முதல்கட்டமாக 10 பேர் உயிரிழப்பு

லெபனானில் ஏற்பட்ட வெடிவிபத்தில் முதல்கட்டமாக 10 பேர் உயிரிழப்பு

By: Karunakaran Wed, 05 Aug 2020 10:42:46 AM

லெபனானில் ஏற்பட்ட வெடிவிபத்தில் முதல்கட்டமாக 10 பேர் உயிரிழப்பு

லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுக பகுதியில் பயங்கர சத்தத்துடன் இரவு திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து பெய்ரூட் நகரம் முழுவதும் உணரப்பட்டது. இந்த வெடிவிபத்து காரணமாக அங்கிருந்த வீடுகள், கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகி துறைமுகமே உருகுலைந்தது,

மேலும், சாலையில் சென்றுகொண்டிருந்த வாகனங்கள் தீ பற்றி எரிந்தன. பல கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள வீடுகளின் கண்ணாடிகள் நெறுங்கி, பெய்ரூட் நகரமே அதிர்ந்து புகைமூட்டமாகியது. தற்போது வெளியான முதல்கட்ட தகவலில், துறைமுகத்தில் பழைய வெடிபொருட்கள் சேகரித்து வைக்கப்பட்டிருந்த அறையில் தீ விபத்து ஏற்பட்டு, அடுத்த சில வினாடிகளில் பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து நடந்துள்ளது தெரிய வந்துள்ளது.

10 dead,bomb blasts,lebanon,beirut ,10 பேர் இறப்பு, வெடிகுண்டு குண்டுவெடிப்பு, லெபனான், பெய்ரூட்

இந்த வெடிவிபத்து 2 முறை நடைபெற்றுள்ளது. தற்போதும் துறைமுகத்தில் தீ பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. தற்போதுவரை இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மேலும், நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர். நூற்றுக்கணக்கான அவசர அழைப்புகள் தொடர்ந்து வந்துகொண்டிருப்பதால் பலி எண்ணிக்கை பலமடங்கு அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் அங்குள்ள மருத்துவமனைகளுக்கு நூற்றுக்கணக்கான வாகனங்கள் வந்துகொண்டிருக்கிறது. இந்த விபத்து குறித்து அந்நாட்டு அதிபர் தேசிய பாதுகாப்பு கவுன்சிலை உடனடியாக கூட்டியுள்ளார். இந்த விபத்துக்கான காரணம் குறித்து விரைவில் தெரிவிக்கப்படும் என அந்நாட்டு பாதுகாப்புத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விபத்து லெபனானில் நாளை தேசிய துக்கதினமாக அனுசரிக்கப்படுகிறது.


Tags :