Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆப்கானிஸ்தானில் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 16 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 16 பேர் உயிரிழப்பு

By: Karunakaran Sun, 02 Aug 2020 3:55:28 PM

ஆப்கானிஸ்தானில் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 16 பேர் உயிரிழப்பு

உலகம் முழுவதும் கொரோனா வைரஸுக்கு எதிராக மக்கள் போராடி வரும் நிலையிலும் கூட, பல்வேறு பகுதிகளில் மக்கள் இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்டு அவதியடைந்து வருகின்றனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் கிழக்கு பகுதியில் உள்ள நங்கார்ஹார் மாகாணத்தில் நேற்று முன்தினம் முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

இந்த கனமழை காரணமாக அங்குள்ள பல்வேறு மாவட்டங்களில் முக்கிய நீர் நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் ஊர்களுக்குள் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் அங்கிருந்த ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

16 dead,floods,afghanistan,heavy rain ,16 பேர் இறப்பு,வெள்ளம், ஆப்கானிஸ்தான், பலத்த மழை

நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன. இதனால் அங்குள்ள மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து கடும் அவதியடைந்து வருகின்றனர். இந்த மழை வெள்ளம் காரணமாக அனைத்து வகையான பொது போக்குவரத்தும் முடங்கியுள்ளது. மின்சாரம் தகவல்தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளது.

அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் முடங்கியுள்ளது. இந்நிலையில் இந்த வெள்ளத்தில் சிக்கி இதுவரை 16 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்களில் பெரும்பாலானோர் சிறுவர்கள் என கூறப்பட்டுள்ளது.

Tags :
|