Advertisement

கார் விபத்தில் அண்ணன் கண் எதிரே தம்பி பலி

By: Monisha Wed, 04 Nov 2020 11:19:13 AM

கார் விபத்தில் அண்ணன் கண் எதிரே தம்பி பலி

திருவேற்காடு பகுதியைச் சேர்ந்தவர் முகமது யூனுஸ். இவருடைய மகன்கள் முகமது ஆசிக் (வயது 24), முகமது வாசிம் (20). நேற்று முன்தினம் இரவு அண்ணன்-தம்பி இருவரும் அசோக்நகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு காரில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். காரை முகமது வாசிம் ஓட்டினார். அருகில் அவரது அண்ணன் முகம்மது ஆசிக் அமர்ந்து கொண்டிருந்தார்.

வடபழனி 100 அடி சாலையில் சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் நின்று கொண்டிருந்த மொபட், ஆட்டோ மற்றும் லாரியின் மீது மோதியதுடன், அதே வேகத்தில் சாலையில் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் கார் அப்பளம்போல் நொறுங்கியது. கார் மோதியதில் மொபட், ஆட்டோவும் சேதமடைந்தது.

car,accident,kill,injury,police ,கார்,விபத்து,பலி,காயம்,போலீசார்

இதில் காரை ஓட்டி வந்த முகமது வாசிம் படுகாயம் அடைந்து, அண்ணன் கண் எதிரேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது அண்ணன் முகமது ஆசிப் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் பலியான முகமது வாசிம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags :
|
|
|