Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மத்திய அரசு ஒப்புதல் கிடைத்தவுடன் பட்ஜெட் தொடர்; புதுச்சேரி முதல்வர் தகவல்

மத்திய அரசு ஒப்புதல் கிடைத்தவுடன் பட்ஜெட் தொடர்; புதுச்சேரி முதல்வர் தகவல்

By: Nagaraj Sat, 06 June 2020 7:27:45 PM

மத்திய அரசு ஒப்புதல் கிடைத்தவுடன் பட்ஜெட் தொடர்; புதுச்சேரி முதல்வர் தகவல்

ஒப்புதல் கிடைத்தவுடன் பட்ஜெட் கூட்டத் தொடர்... மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன் புதுச்சேரி 2020-21-ம் ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கும் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

மூன்று மாத செலவினங்களுக்கான கடந்த மார்ச் மாதம் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

puducherry,social space,budget,meeting series ,புதுச்சேரி, சமூக இடைவெளி, பட்ஜெட், கூட்டத் தொடர்

மத்திய அரசு அனுமதி கிடைத்தவுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் கூட்டப்படும். 2020-21-ம் ஆண்டிற்கான முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

இது தொடர்பாக இன்று மாலை அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி பட்ஜெட்டில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படும். வரும் 8-ம் தேதி அனைத்து வழிபாட்டு தலங்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உணவகங்கள், ஓட்டல்களில் 50 சதவீதம் பேர் உணவருந்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் விழிப்புடன் இருந்து கட்டாயம் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags :
|