மதுரையில் தீயை அணைக்கும் போது கட்டிடம் இடிந்து விழுந்து 2 தீயணைப்பு வீரர்கள் பலி
By: Nagaraj Sat, 14 Nov 2020 2:59:39 PM
ஜவுளிக்கடையில் ஏற்பட்ட தீயை அணைக்கும் போது 2 தீயணைப்பு வீரர்கள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை தெற்கு மாசி வீதியில் உள்ள ஜவுளிக்கடையில் பற்றிய தீயை அணைக்கும் முயற்சியின்போது இரண்டு தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்தனர்.
மதுரை தெற்கு மாசி வீதியில் உள்ள ஜவுளிக்கடையில் நேற்று நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் தீ வேகமாக பரவியதால் அப்பகுதி முழுவதும் புகைமண்டலம் எழுந்தது.
இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை கட்டுப்படுத்தும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டனர்.
அப்போது,
அந்த கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. சிவராஜன் மற்றும்
கிருஷ்ணமூர்த்தி ஆகிய தீயணைப்பு வீரர்கள் இடிபாடுகளில் சிக்கி பலத்த காயம்
அடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால்
சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர்.
ஜவுளிக்கடை செயல்பட்ட
கட்டிடம் மிகவும் பழமையானது என்றும், தீப்பிடித்தபோது கட்டிடம் இடிந்து
விழுந்ததால் உயிரிழப்பு ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.