Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சாத்தான்குளம் வழக்கு குறித்து சிபிசிஐடி டிஎஸ்பி - சிபிஐ குழு சந்திப்பு

சாத்தான்குளம் வழக்கு குறித்து சிபிசிஐடி டிஎஸ்பி - சிபிஐ குழு சந்திப்பு

By: Nagaraj Sat, 18 July 2020 8:21:58 PM

சாத்தான்குளம் வழக்கு குறித்து சிபிசிஐடி டிஎஸ்பி - சிபிஐ குழு சந்திப்பு

நாட்டையை உலுக்கிய சம்பவம் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்குதான். இதில் நீதிமன்றமே தன்னிசையாக இந்த வழக்கை எடுத்தது. இதனால் இன்று சிபிஐ வசம் இந்த வழக்கு ஒப்படைக்கப்பட்டு விசாரணைகள் நடந்து வருகிறது.

இந்த சாத்தான்குளம் ஜெயராஜ் - பென்னிக்ஸ் கொலை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி - டி.எஸ்.பி அனில் குமாரிடம் சிபிஐ அதிகாரிகள், மதுரையில் 4 மணி நேரம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஆத்திக்குளம் பகுதியில் உள்ள சிபிஐ அலுவலகத்திற்கு அனில் குமாரும் அவரது குழுவினரும் வரவழைக்கப்பட்டனர்.

cbi,investigation,cpcid police,sathankulam ,சிபிஐ, விசாரணை, சிபிசிஐடி போலீசார், சாத்தான்குளம்

சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையின் போது எடுக்கப்பட்ட புகைப்பட ஆவணங்களை, சிபிஐ அதிகாரிகளிடம் அனில்குமார் ஒப்படைத்தார். ஜெயராஜ் - பென்னிக்ஸ் கொலை வழக்கில் காவல்துறை ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டபோது, சிபிசிஐடி பதிவு செய்த தகவல்களை ஒப்பீடு செய்து, அதில் உள்ள சந்தேகங்களை சிபிஐ அதிகாரிகள் அனில்குமாரிடம் கேட்டறிந்து ஆவணப்படுத்தினர்.

சுமார் 4 மணி நேரம் நீடித்த சிபிஐ விசாரணை மாலையில் முடிவடைந்ததும், சிபிசிஐடி டிஎஸ்பி அனில் குமாரும் அவரது குழுவினரும் காரில் திருநெல்வேலிக்கு திரும்பினர். இந்த வழக்கு தற்போது விரைவாக நடத்தப்பட்டு வருகிறது என்று விபரமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Tags :
|