Advertisement

தமிழகத்தில் 2 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு

By: Monisha Thu, 15 Oct 2020 3:26:37 PM

தமிழகத்தில் 2 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு

கன்னியாகுமரி, தென்காசி மாவட்டத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

கன்னியாகுமரி, தென்காசி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வட தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

rain,weather,fishermen,strong winds,bay of bengal ,மழை,வானிலை,மீனவர்கள்,பலத்த காற்று,வங்கக்கடல்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மன்னார் வளைகுடா, வங்கக்கடலில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் இரணியல், பெரியாறு பகுதியில் தலா 5 செ.மீ., சித்தார், குளைச்சல் பகுதிகளில் தலா 4 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags :
|