Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • முதலமைச்சர் நாராயணசாமி காரைக்காலில் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாமை தொடங்கி வைத்தார்

முதலமைச்சர் நாராயணசாமி காரைக்காலில் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாமை தொடங்கி வைத்தார்

By: Monisha Fri, 11 Dec 2020 10:55:23 AM

முதலமைச்சர் நாராயணசாமி காரைக்காலில் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாமை தொடங்கி வைத்தார்

தீன்தயாள் உபாத்யாயா கிராமின் கவுசல்யா யோஜனா திட்டம் மத்திய, மாநில அரசின் ஊரக வளர்ச்சித் துறை மூலமாக செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் திருச்சியைச் சேர்ந்த ஆர்.எஸ் கல்வி அறக்கட்டளை சார்பில் காரைக்கால் பேருந்து நிலைய மாடியிலுள்ள கருத்தரங்கு அறையில் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. இதனை முதலமைச்சர் நாராயணசாமி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் வைத்திலிங்கம் எம்.பி., அமைச்சர் கமலக்கண்ணன், மாவட்ட கலெக்டர், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு, துணை கலெக்டர், வட்டார வளர்ச்சித்துறை அதிகாரி, ஆர்.எஸ்.கல்வி அறக்கட்டளை தலைவர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த திட்டத்தில் 18 வயது முதல் 40 வயதிற்குட்பட்ட 400 பேருக்கு தையல், கம்ப்யூட்டர் சார்ந்த பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. பயிற்சி நடைபெறும் நாட்களில் மாணவர்களுக்கு தேவையான தேநீர், உணவு மற்றும் உதவித்தொகைகள் போன்றவை வழங்கப்படும். நிகழ்ச்சியை தொடர்ந்து முதலமைச்சர் நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

skills,development,training,camp,interview ,திறன்,மேம்பாடு,பயிற்சி,முகாம்,பேட்டி

பேட்டியின் போது முதலமைச்சர் நாராயணசாமி கூறியதாவது:- மாநிலம் முழுவதும், கிராமப்புற மக்கள் சுயதொழில் செய்வதற்கு ஏதுவாக தையல், கணினி, சுயஉதவிக் குழுக்கள் மூலம் வாகனங்கள் வாங்கி சுயதொழில் செய்வது உள்ளிட்ட பல்வேறு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதனை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். புதுச்சேரி, காரைக்காலில் கடந்த ஒரு வாரமாக பெய்த மழையினால், ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து மத்தியக் குழுவிடம், அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.

நெல், வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்கள் பாதிப்பு, நகர்ப்புறம் மற்றும் கிராமப்புற பகுதிகளில் சுமார் 300 கி.மீ சாலைகள் பாதிப்பு, புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் சுமார் ரூ.2,800 ஹெக்டேர் பரப்பிலான விவசாய நிலங்கள் பாதிப்பு உள்ளிட்ட எல்லாவற்றையும் சேர்த்து புயல், மழையால் சுமார் ரூ.400 கோடிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் முதல் கட்டமாக இடைக்கால நிதியாக ரூ.100 கோடி வழங்க வேண்டும் என்று ஏற்கனவே பிரதமர், உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளேன் என அவர் தெரிவித்தார்.

Tags :
|
|