Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சீனப் பொருட்களை வர்த்தகர்கள், பொதுமக்கள் புறக்கணிப்பு

சீனப் பொருட்களை வர்த்தகர்கள், பொதுமக்கள் புறக்கணிப்பு

By: Nagaraj Mon, 16 Nov 2020 2:52:21 PM

சீனப் பொருட்களை வர்த்தகர்கள், பொதுமக்கள் புறக்கணிப்பு

சீனப் பொருட்களை புறக்கணித்த மக்கள்... தீபாவளி பண்டிகை விற்பனையின்போது சீனப் பொருட்களை மக்கள் புறக்கணித்ததால் அந்த நாட்டிற்கு ரூ.40 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

சீன வீரர்கள் கடந்த ஜூன் மாதம் இந்திய எல்லைக்குள் நுழைய முயன்றபோது நம் வீரர்கள் தடுத்து நிறுத்தி பின்வாங்க செய்தனர். அப்போது சீன வீரர்களுடன் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அத்துடன், சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்று உந்துதலை பொதுமக்களிடம் ஏற்படுத்தியது.

சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என பொதுமக்கள் தங்கள் வலைத்தளங்கள் வாயிலாக தொடர்ந்து தகவல்களை பகிர்ந்தனர். இதன் தாக்கம் தீபாவளி பண்டிகை காலத்தில் எதிரொலித்தது. அதாவது நாட்டின் முக்கிய நகரங்களில் தீபாவளி பண்டிகை காலத்தில் மட்டும் ரூ.72 ஆயிரம் கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது.

chinese goods,diwali sales,public,boycott,traders ,சீனப்பொருட்கள், தீபாவளி விற்பனை, பொதுமக்கள், புறக்கணிப்பு, வர்த்தகர்கள்

அதேசமயம் சீன பொருட்களை வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் புறக்கணித்ததால் சீனாவுக்கு ரூ.40 ஆயிரம் கோடிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளளதாக அனைத்திந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு (சி.ஏ.ஐ.டி.) தெரிவித்துள்ளது. அனைத்திந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு (சி.ஏ.ஐ.டி.) தனது ஆய்வுகளுக்காக, டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, கொல்கத்தா, நொய்டா, கொச்சின் உள்பட 20 முக்கிய நகரங்களை விநியோக நகரங்களாக எடுத்துக்கொண்டு, தீபாவளி பண்டிகை கால விற்பனை தொடர்பாக ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.

அனைத்திந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பின் அறிக்கையின்படி, சீன பொருட்கள் புறக்கணிப்புக்கு மத்தியில் தீபாவளி பண்டிகை காலத்தில் 20 விநியோக நகரங்களில், நுகர்வோர் சாதனங்கள், தங்க நகைகள், காலணிகள் என அனைத்து விதமான பொருட்களும் சுமார் மொத்தம் ரூ.72 ஆயிரம் கோடிக்கு வியாபாரம் நடந்துள்ளது. சீன பொருட்களை மக்களும், வர்த்தகர்களும் புறக்கணித்ததால் சீன பொருட்கள் விற்பனை அடியோடு முடங்கியது.

இதனால் சீனாவுக்கு இந்த பண்டிகை காலத்தில் மட்டும் ரூ.40 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வர்த்தகர்களும், பொதுமக்களும் சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்று சி.ஏ.ஐ.டி. ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags :
|