Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசனை கூட்டம்

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசனை கூட்டம்

By: Nagaraj Sat, 10 Oct 2020 3:04:29 PM

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசனை கூட்டம்

ஆலோசனை கூட்டம்... தமிழகத்தில் தொடங்கவுள்ள வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி வருகிற 12-ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை கூட்டம் நடத்துகிறார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அடுத்த வாரம் தொடங்க இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகின்ற 12ம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறார்.

advice,northeast monsoon,meeting,precaution ,ஆலோசனை, வடகிழக்கு பருவமழை, கூட்டம், முன்னெச்சரிக்கை

அக்டோபர் மாதம் மூன்றாம் வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது. ஒவ்வொரு மாவட்டங்களிலும் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அரசு அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை கூட்டம் நடத்துகிறார்.

ஏரிகள், குளங்கள் தூர் வாருதல்,தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லுதல் பற்றி ஆலோசனை நடத்த உள்ளார்.

Tags :
|