Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 41 பேருக்கு கொரோனா உறுதி

புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 41 பேருக்கு கொரோனா உறுதி

By: Monisha Thu, 09 July 2020 10:12:57 AM

புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும்  41 பேருக்கு கொரோனா உறுதி

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏற்கனவே 449 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 41 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,22,350 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவுக்கு 74,167 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,700-ஆக அதிகரித்துள்ளது.

மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. சென்னையை தொடர்ந்து செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது.

pudukkottai district,coronavirus,influence,treatment,kills ,புதுக்கோட்டை மாவட்டம்,கொரோனா வைரஸ்,பாதிப்பு,சிகிச்சை,பலி

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று வரை 449 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 186 கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 256 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு 7 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் 41 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 490-ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Tags :