Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரேநாளில் 475 பேருக்கு கொரோனா உறுதி

திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரேநாளில் 475 பேருக்கு கொரோனா உறுதி

By: Monisha Thu, 16 July 2020 3:32:57 PM

திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரேநாளில் 475 பேருக்கு கொரோனா உறுதி

மாவட்டத்தில் ஏற்கனவே 7,573 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று ஒரேநாளில் 475 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தீவிரமடைந்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,51,820 ஆக உள்ளது. தமிழகத்தில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,02,310 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் இறப்பு எண்ணிக்கை 2,167 ஆக உயர்ந்துள்ளது.

மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. சென்னையை தொடர்ந்து செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது.

tiruvallur district,corona virus,infection,treatment,deaths ,திருவள்ளூர் மாவட்டம், கொரோனா வைரஸ்,பாதிப்பு,சிகிச்சை,பலி

சென்னைக்கு அண்டை மாவட்டமான திருவள்ளூர் மாவட்டத்தில் ஏற்கனவே 7,573 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று ஒரேநாளில் 475 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,048 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 4,335 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 134 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா நோய் பரவல் தீவிரம் அடைந்து வருவதால் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத் துறையினர் பரிசோதனை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். பொதுமக்கள் வெளியில் செல்லும்போது கட்டாயம் முகக்கவசம் அணியவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Tags :