Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 49 பேருக்கு கொரோனா உறுதி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 49 பேருக்கு கொரோனா உறுதி

By: Monisha Mon, 22 June 2020 6:01:08 PM

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 49 பேருக்கு கொரோனா உறுதி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏற்கனவே 1,159 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 49 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதல் வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் மாநிலத்தில் புதிதாக 2 ஆயிரத்து 532 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 59 ஆயிரத்து 377 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 25 ஆயிரத்து 863 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 32 ஆயிரத்து 754 பேர் குணமடைந்துள்ளனர்.

kanchipuram district,coronavirus,treatment,influence,tamilnadu ,காஞ்சிபுரம் மாவட்டம்,கொரோனா வைரஸ்,சிகிச்சை,பாதிப்பு,தமிழ்நாடு

அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 41,172 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏற்கனவே 1,159 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 49 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,208 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 588 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பரவல் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டம் உட்பட 4 மாவட்டங்களில் ஜூன் 30-ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

Tags :