Advertisement

நெல்லை மாவட்டத்தில் மேலும் 180 பேருக்கு கொரோனா உறுதி

By: Monisha Fri, 17 July 2020 3:30:42 PM

நெல்லை மாவட்டத்தில் மேலும் 180 பேருக்கு கொரோனா உறுதி

நெல்லை மாவட்டத்தில் ஏற்கனவே 2,228 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று மேலும் 180 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 56 ஆயிரத்து 369 ஆக அதிகரித்துள்ளது. நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 46 ஆயிரத்து 714 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் தாக்குதலுக்கு தமிழகத்தில் இதுவரை 2,236 பேர் உயிரிழந்துள்ளனர்.

மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. சென்னையில் 82 ஆயிரத்து 128 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

corona virus,infection,treatment,deaths ,நெல்லை,கொரோனா வைரஸ்,பாதிப்பு,சிகிச்சை,பலி

சென்னையை தொடர்ந்து செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய இடங்களிலும், தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய இடங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது.

நெல்லை மாவட்டத்தில் நேற்று வரை 2,228 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 1,069 கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 1,148 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு 11 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இன்று நெல்லை மாவட்டத்தில் 180 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,408-ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்டம் முழுவதும் பல்வேறு தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் பொதுமக்கள் வெளியில் செல்லும் போது முகக்கவசம் அணியவும், சமூக இடைவெளி கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தப்படுகின்றனர்.

Tags :