Advertisement

மதுரையில் புதிதாக 75 பேருக்கு கொரோனா உறுதி

By: Monisha Thu, 15 Oct 2020 10:31:07 AM

மதுரையில் புதிதாக 75 பேருக்கு கொரோனா உறுதி

மதுரை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்து 716 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 70 ஆயிரத்து 392 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 42 ஆயிரத்து 566 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 17 ஆயிரத்து 403 ஆக அதிகரித்துள்ளது. ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்து 423 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் மதுரையில் நேற்று புதிதாக 75 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 55 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்து 716 ஆக உயர்ந்துள்ளது.

madurai,corona virus,infection,treatment,death ,மதுரை,கொரோனா வைரஸ்,பாதிப்பு,சிகிச்சை,பலி

மதுரையில் நேற்று 61 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதில் 50 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். இவர்களுடன் சேர்த்து மதுரையில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 505 ஆக அதிகரித்துள்ளது. இவர்களை தவிர 803 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். ஏற்கனவே குணம் அடைந்து வீடு திரும்பியவர்களுக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்படாமல் இருக்கும் வகையிலான ஆலோசனைகளை மருத்துவ குழுவினர் தினந்தோறும் வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில் மதுரையில் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற ஒருவர், தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற இருவர் நேற்று உயிரிழந்தனர். இதன் மூலம் மதுரையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 402 ஆக உயர்ந்துள்ளது.

Tags :