பேலியகொடவில் கொரோனா பாதிப்பு 11 ஆயிரத்தை கடந்தது
By: Nagaraj Wed, 11 Nov 2020 2:27:22 PM
11 ஆயிரத்தை தாண்டியது... மினுவங்கொட மற்றும் பேலியகொட கொரோனா கொத்தணியில் வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 237 ஆக அதிகரித்துள்ளது.
அவர்களுள் ஆயிரத்து 41 பேர் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் என்பதுடன், ஆயிரத்து 7 பேர் மீன் சந்தை ஊழியர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஏனைய 9 ஆயிரத்து 189 பேர் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து, இலங்கையில் இதுவரையில் 14 ஆயிரத்து 715 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த
24 மணித்தியாலங்களில் மாத்திரம் புதிதாக 430 பேர் இனங் காணப்பட்டதை
அடுத்து இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதேநேரம் இந்த தொற்றில் இருந்து
இதுவரையில் 9 ஆயிரத்து 537 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதுடன், 5
ஆயிரத்து 137 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று
வருகின்றனர்.
அதேவேளை, இலங்கையில் இதுவரையில் கொரோனா தொற்றுக்கு
உள்ளாகி 41 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளமை
குறிப்பிடத்தக்கது.