பிரான்ஸில் இதுவரை இல்லாத அளவு நாளொன்றுக்கான கொரோனா பாதிப்பு பதிவு
By: Nagaraj Mon, 26 Oct 2020 1:27:23 PM
பிரான்ஸில் இதுவரை இல்லாத அளவு நாளொன்றுக்கான கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உச்சத்தை தொட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 22ஆயிரத்து 2பேர் பாதிக்கப்பட்டதோடு, 116பேர் உயிரிழந்துள்ளனர். பிரான்ஸில் கொரோனா வைரஸ் தொற்று பரவியதிலிருந்து பதிவான நாளொன்றுக்கான அதிகப்பட்ச பாதிப்பு எண்ணிக்கை இதுவாகும்.
உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றினால், அதிக பாதிப்பை எதிர்கொண்ட ஐந்தாவது
நாடாக முன்னேறியுள்ள பிரான்ஸில், இதுவரை 11 இலட்சத்து 38ஆயிரத்து 507பேர்
பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 34ஆயிரத்து 761பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை
ஒன்பது இலட்சத்து 93ஆயிரத்து 424பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட
நிலையில், அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில்
இரண்டாயிரத்து 500பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை ஒரு இலட்சத்து பத்தாயிரத்து 322பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.