Advertisement

திருச்சியில் 20 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி

By: Monisha Fri, 07 Aug 2020 1:25:24 PM

திருச்சியில் 20 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி

திருச்சி காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் பணிபுரியும் 20 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 79 ஆயிரத்து 144 ஆக அதிகரித்துள்ளது. நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 53 ஆயிரத்து 642 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாநிலத்தில் 2 லட்சத்து 21 ஆயிரத்து 87 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். ஆனாலும், தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 4 ஆயிரத்து 571 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் பொதுமக்கள் மட்டுமின்றி கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் அமைச்சர்கள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை தொற்று பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

trichy,police,corona virus,infection,treatment ,திருச்சி,போலீசார்,கொரோனா வைரஸ்,பாதிப்பு,சிகிச்சை

நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், நர்சுகளும், தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் சுகாதார பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், போலீசார், தீயணைப்புத்துறையினர் என பலதரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் பணிபுரியும் 20 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

காவல் நிலையத்தில் பணிபுரியும் 120 பேரில் 20 பேருக்கு தொற்று உறுதியானதால் காவலர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

Tags :
|
|