Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனாவுக்கு 3 வயது, 5 வயது சிறுமிகள் பலி; மக்கள் அதிர்ச்சி

கொரோனாவுக்கு 3 வயது, 5 வயது சிறுமிகள் பலி; மக்கள் அதிர்ச்சி

By: Nagaraj Thu, 30 July 2020 9:42:49 PM

கொரோனாவுக்கு 3 வயது, 5 வயது சிறுமிகள் பலி; மக்கள் அதிர்ச்சி

கொரோனாவுக்கு 3 வயது, 5 வயது சிறுமிகள் பலியானதால் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத அளவாக கொரோனாவுக்கு இன்று ஒரே நாளில் 97 பேர் பலியாகி உள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் இன்றும் வேகம் எடுத்துள்ளது. 2வது வாரமாக பாதிப்பு 5000ஐ கடந்துள்ளது. இன்றும் உச்சக் கட்டமாக 5,864 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதன் மூலம் ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,39,978 ஆக உயர்ந்துள்ளது. வழக்கம் போல் சென்னையில் தான் பாதிப்பு அதிகம்.

97 killed,corona,tamil nadu,girls,trauma,people ,97 பேர் பலி, கொரோனா, தமிழகம், சிறுமிகள், அதிர்ச்சி, மக்கள்

சென்னையில் மட்டும் இன்று 1,175 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. கிட்டத்தட்ட 98,767 பேர் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

அரியலூரை சேர்ந்த 5 வயது சிறுமி, நாகையை சேர்ந்த 3 வயது சிறுமி உட்பட ஒரே நாளில் 97 பேர் பலியாகி இருக்கின்றனர். இதன்மூலம் பலியானவர்களின் எண்ணிக்கை 3,741 ஆக உயர்ந்துள்ளது. தனியார் மருத்துவமனையில் 32 பேரும், அரசு மருத்துவமனையில் 65 பேர் உயிரிழந்துள்ளனர்.

Tags :
|
|
|