Advertisement

விழுப்புரத்தில் இன்று கொரோனா பாதித்து ஒருவர் பலி

By: Nagaraj Sat, 27 June 2020 1:50:09 PM

விழுப்புரத்தில் இன்று கொரோனா பாதித்து ஒருவர் பலி

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று கொரோனோ தொற்றுக்கு மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

விழுப்புரம் மாவட்டத்தில் 712 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்த நிலையில் விழுப்புரம் சிங்காரத்தோப்பு பாத்திமா லே-அவுட் பகுதியைச் சேர்ந்த 42 வயது நபர் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளார். காய்ச்சல் காரணமாக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இதனால் பலியானவர்கள் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.

Tags :