Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரத்துக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரத்துக்கு கொரோனா பாதிப்பு உறுதி

By: Monisha Mon, 03 Aug 2020 12:19:30 PM

சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரத்துக்கு கொரோனா பாதிப்பு உறுதி

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே செல்கிறது. தமிழகத்தில் பொதுமக்களை தொடர்ந்து கொரோனாவுக்கு அரசியல் தலைவர்கள், அதிகாரிகள் ஆகியோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனுமான கார்த்தி சிதம்பரத்துக்கு தற்போது கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

sivagangai,mp,karthi chidambaram,corona virus,positive ,சிவகங்கை,எம்பி,கார்த்தி சிதம்பரம்,கொரோனா வைரஸ்,பரிசோதனை

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில் கூறுகையில், எனக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் லேசான அறிகுறிகள் மட்டுமே தென்பட்டுள்ளது. இப்போது வீட்டில் தனிமையில் இருக்கிறேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் மருத்துவ வழிமுறைகளை பின்பற்றுங்கள். இவ்வாறு கார்த்தி சிதம்பரம் எம்.பி. தகவல் தெரிவித்துள்ளார்.

Tags :
|