Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நெல்லை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு ஏழாயிரத்தை கடந்தது!

நெல்லை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு ஏழாயிரத்தை கடந்தது!

By: Monisha Thu, 13 Aug 2020 12:29:04 PM

நெல்லை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு ஏழாயிரத்தை கடந்தது!

நெல்லை மாவட்டத்தில் ஏற்கனவே 6,938 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று மேலும் 164 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.

தமிழகத்தில் நேற்று புதிதாக 5 ஆயிரத்து 871 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 14 ஆயிரத்து 520 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 56 ஆயிரத்து 313 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

nellai district,corona virus,infection,death,treatment ,நெல்லை மாவட்டம்,கொரோனா வைரஸ்,பாதிப்பு,பலி,சிகிச்சை

மற்ற மாவட்டங்களை விட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. தற்போது தென் மாவட்டங்களிலும் கொரோனா வேகமாக பரவி வருகிறது.

இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் ஏற்கனவே 6,938 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று மேலும் 164 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,102 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக நெல்லை நகரில் 78 பேருக்கும், வள்ளியூர் பகுதியில் 25 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.

Tags :
|