Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பாகிஸ்தானில் கடந்த 24 மணிநேரத்தில் 799 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

பாகிஸ்தானில் கடந்த 24 மணிநேரத்தில் 799 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

By: Nagaraj Thu, 24 Sept 2020 4:31:27 PM

பாகிஸ்தானில் கடந்த 24 மணிநேரத்தில் 799 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

புதிதாக 799 பேருக்கு கொரோனா... பாகிஸ்தானில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 799 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 308,217 ஆக அதிகரித்துள்ளது.

பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. அந்தவகையில் பாகிஸ்தானில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக பாகிஸ்தான் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 799 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 308,217-ஆக அதிகரித்துள்ளது. 7,388 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

pakistan,corona damage,increase,experiments ,பாகிஸ்தான், கொரோனா பாதிப்பு, அதிகரிப்பு, பரிசோதனைகள்

புதிதாக 8 பேர் உயிரிழந்ததால் மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6,437-ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து 294,392 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

அதிகபட்சமாக சிந்து மாகாணத்தில் 134,845 பேரும், பஞ்சாப் பகுதியில் 98,686 பேரும், கைபர் பதுன்க்வாவில் 37,470 பேரும், இஸ்லாமபாத்தில் 16,288-ஆகவும் அதிகரித்துள்ளது. பலுசிஸ்தானில் 14,765 பேரும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 2,591 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மொத்தமாக 3,306,515 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன இவ்வாறு சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :