Advertisement

விழுப்புரத்தில் கொரோனாவுக்கு 18 மாத ஆண் குழந்தை பலி

By: Monisha Sun, 28 June 2020 12:11:49 PM

விழுப்புரத்தில் கொரோனாவுக்கு 18 மாத ஆண் குழந்தை பலி

விழுப்புரத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 18 மாத ஆண் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரம் அடைந்து வருகிறது. நேற்று மட்டும் புதிதாக 3 ஆயிரத்து 713 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 78 ஆயிரத்து 335 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று வரை கொரோனாவால் 765 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 452 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 13 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.

villupuram,coronavirus,male child,dead ,விழுப்புரம்,கொரோனா வைரஸ்,ஆண் குழந்தை,பலி

இந்நிலையில் இன்று விழுப்புரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 18 மாத ஆண் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

திண்டிவனம் பகுதியைச் சேர்ந்த 18 மாத ஆண் குழந்தையை காய்ச்சல் காரணமாக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. பின்னர் குழந்தைக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறதியானது. இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

Tags :