Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மதுரை மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு...ஒரேநாளில் 310 பேருக்கு கொரோனா உறுதி

மதுரை மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு...ஒரேநாளில் 310 பேருக்கு கொரோனா உறுதி

By: Monisha Thu, 09 July 2020 10:01:45 AM

மதுரை மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு...ஒரேநாளில் 310 பேருக்கு கொரோனா உறுதி

மதுரை மாவட்டத்தில் ஏற்கனவே 5,057 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 310 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை உயர்ந்த வண்ணம் உள்ளது. மாநிலத்தில் நேற்று புதிதாக 3,756 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,22,350 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவுக்கு 74,167 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,700-ஆக அதிகரித்துள்ளது.

மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.

madurai,coronavirus,influence,kills,treatment ,மதுரை,கொரோனா வைரஸ்,பாதிப்பு,பலி,சிகிச்சை

சென்னையை தொடர்ந்து செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் ஏற்கனவே 5,057 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 310 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,367 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 1,160 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 86 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மதுரை மாவட்டத்தில் 12-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

Tags :
|