Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தங்கம் விலை குறைவு எதிரொலி: நகை கடைகளில் அலை மோதிய பொதுமக்கள் கூட்டம்

தங்கம் விலை குறைவு எதிரொலி: நகை கடைகளில் அலை மோதிய பொதுமக்கள் கூட்டம்

By: Monisha Mon, 19 Oct 2020 11:07:26 AM

தங்கம் விலை குறைவு எதிரொலி: நகை கடைகளில் அலை மோதிய பொதுமக்கள் கூட்டம்

தங்கத்தின் விலை குறைந்ததையடுத்து நகை கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலை மோதியது.

உலக அளவிலான பொருளாதார மாற்றம் மற்றும் பங்கு சந்தையில் ஏற்பட்ட ஏற்ற இறக்கம் காரணமாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் தங்கத்தின் விலை திடீரென பவுனுக்கு ரூ.1,464 குறைந்து ஒரு பவுன் தங்கம் ரூ.37 ஆயிரத்து 440-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கத்தின் விலை மாற்றம் இன்றி அதே விலைக்கு விற்பனையானது. இதனால், நகை கடைகளில் தங்கம் விற்பனை நேற்று அதிகரித்து காணப்பட்டது.

gold,price,public,jewelry store,sale ,தங்கம்,விலை,பொதுமக்கள்,நகை கடை,விற்பனை

தங்கத்தின் விலை ஒரே நாளில் அதிக அளவில் குறைந்ததாலும், பண்டிகைகள் நெருங்குவதாலும், பொதுமக்களிடையே தங்கம் வாங்க மிகவும் அதிகமாக ஆர்வம் ஏற்பட்டது.

இதன்தொடர்ச்சியாக நேற்று சென்னையில் உள்ள ஜி.ஆர்.டி. ஜூவல்லரி, பிரின்ஸ் ஜூவல்லரி, லலிதா ஜூவல்லரி, கசானா ஜூவல்லரி, என்.ஏ.சி. ஜூவல்லரி, ஜோய் அலுக்காஸ், மலபார் கோல்டு ஜூவல்லரி, சரவணா ஸ்டோர்ஸ் போன்ற நகை கடைகளில் நேற்று காலை முதலே பொதுமக்கள் ஏராளமாக சென்று நகை வாங்கினர். நகை கடைகளில் சமூக இடைவெளியை பின்பற்றி வாடிக்கையாளர்களுக்கு நகைகள் விற்பனை செய்யப்பட்டன.

Tags :
|
|
|