Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாமக்கல்லில் சுதந்திர தின கொடியேற்றினார் மாவட்ட ஆட்சியர்

நாமக்கல்லில் சுதந்திர தின கொடியேற்றினார் மாவட்ட ஆட்சியர்

By: Nagaraj Sat, 15 Aug 2020 10:22:23 AM

நாமக்கல்லில் சுதந்திர தின கொடியேற்றினார் மாவட்ட ஆட்சியர்

நாமக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

பின்னர் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஆட்சியரும், காவல் கண்காணிப்பாளர் எஸ்.சக்திகணேசன் ஆகியோர் ஏற்றுக் கொண்டனர்.

namakkal,independence day,district collector,congratulations ,நாமக்கல், சுதந்திர தினம், மாவட்ட ஆட்சியர், பாராட்டுக்கள்

பின்னர் கொரோனா தடுப்பு பணியில் முன்களப் பணியாளர்களாக செயல்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், இதர மருத்துவ பணியாளர்கள், காவல்துறையினர், பல்வேறு அரசு துறையினர் என 173 பேருக்கு மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் துர்கா மூர்த்தி, மாவட்ட கல்வி அலுவலர் உதயகுமார் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags :