Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தி.மு.க.வும், காங்கிரசும் இரட்டை வேடம் போடுகின்றன - எல்.முருகன்

தி.மு.க.வும், காங்கிரசும் இரட்டை வேடம் போடுகின்றன - எல்.முருகன்

By: Monisha Sat, 12 Dec 2020 08:33:58 AM

தி.மு.க.வும், காங்கிரசும் இரட்டை வேடம் போடுகின்றன - எல்.முருகன்

சென்னை தியாகராயநகரில் உள்ள கமலாலயத்தில் தமிழக பா.ஜ.க. தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அங்கு நேற்று பாரதியார் பிறந்ததினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, பாரதியாரின் உருவப்படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. மாநில தலைவர் எல்.முருகன் தலைமையில் பாரதியாரின் உருவ படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தும் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு முன்பு எல்.முருகன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- விவசாயிகளின் விளை பொருட்களுக்கு அவர்களே விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கை புதிய வேளாண் திருத்த சட்டங்களால் நிறைவேறி உள்ளது. விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த பொருட்களை இடைத்தரகர்கள் இன்றி எங்கு வேண்டுமானாலும் விற்பனை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் கூறியதைத்தான் நாங்கள் நிறைவேற்றி இருக்கிறோம். ஆனால் தற்போது தி.மு.க.வும், காங்கிரசும் இரட்டை வேடம் போடுகின்றன.

l. murugan,dmk,congress,double role,farmers ,எல்.முருகன்,தி.மு.க,காங்கிரஸ்,இரட்டை வேடம்,விவசாயிகள்

'விவசாயிகளின் நண்பன் மோடி' என்ற இயக்கத்தை தொடங்கி அதன் மூலம் வேளாண் சட்டங்களை விவசாயிகளிடம் எடுத்து செல்ல உள்ளோம். இதற்காக ஆயிரம் கூட்டங்கள் நடத்த உள்ளோம். இதில் மத்திய மந்திரிகள் கலந்து கொள்ள உள்ளனர். வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு பாதுகாப்பானது என்று தமிழக விவசாயிகளுக்கு தெரிந்து உள்ளதால் தான் தமிழகத்தில் விவசாயிகளின் முழு அடைப்பு போராட்டம் தோல்வியில் முடிந்தது.

பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வேல் யாத்திரை நிறைவு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால், அவர் வரமுடியவில்லை. இந்தநிலையில், வருகிற 30, 31 மற்றும் ஜனவரி 1-ந் தேதிகளில் ஜே.பி.நட்டா தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு வருகை தர உள்ளார் என்று கூறினார்.

Tags :
|