கற்பூரம் போல் திமுக கரைகிறது; அமைச்சர் ஜெயக்குமார் சொல்கிறார்
By: Nagaraj Tue, 25 Aug 2020 8:00:06 PM
தமிழகத்தில் அதிமுக தலைமையில் தான் வரும் தேர்தலில் கூட்டணி அமையும். மு.க.ஸ்டாலினால் திமுக கற்பூரம் போல் கரைந்து வருவதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை ராயபுரம் ஆட்டுத்தொட்டி பகுதியில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு நாடகத்தை அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளிடம் பேசி அவர், தமிழகத்தில் அதிமுக தலைமையில் தான் வரும் தேர்தலில் கூட்டணி அமையும் என்று தெரிவித்தார்.
அந்த வகையில் தேமுதிக, அதிமுக கூட்டணியில் நீடித்து வருவதாக கூறிய
ஜெயக்குமார், அதிமுகவை பொருத்தவரை ஜெயலலிதா இருந்த போது கட்சி எந்த
பலத்தில் இருந்ததோ, அதே பலத்தில்தான் தற்போதும் இருப்பதாகத் தெரிவித்தார்.
திமுகவில்
உள்ள மூத்த நிர்வாகிகளை ஒன்றிணைக்க தெரியாமல் அக்கட்சியின் தலைவர்
மு.க.ஸ்டாலின் இருந்து வருவதால், திமுக என்ற கட்சி கற்பூரம் போல் கரைந்து
வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்தார்.