Advertisement

தீவிர தேடுதல் வேட்டையில் போதைப்பொருள் பறிமுதல்

By: Nagaraj Fri, 25 Sept 2020 10:01:13 PM

தீவிர தேடுதல் வேட்டையில் போதைப்பொருள் பறிமுதல்

போதைப்பொருள் பறிமுதல்... கிராண்டே ப்ரேயரில் பொலிஸார் நடத்திய தீவிர தேடுதல் நடவடிக்கையின் போது, பொலிஸார் 260,000 டொலருக்கும் அதிகமான போதைப்பொருள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

கோகோயின் கடத்தல் வலையமைப்பை கண்டறிவதற்கான இந்த விசாரணை நடவடிக்கையில், எட்டு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 1,143 கிராம் கோகோயின், 2,931 கிராம் செயற்கை கஞ்சா, ஒரு லிட்டர் காமா-ஹைட்ராக்சிபியூட்ரேட் (ஜி.எச்.பி) ஆகியவற்றை பொலிஸார் பறிமுதல் செய்தனர். அத்துடன் 60,010 ரொக்கம் மற்றும் இரண்டு வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

3 persons,arrest,drug,33 charges ,3 பேர், கைது, போதைப்பொருள், 33 குற்றச்சாட்டுக்கள்

மூன்று கிராண்டே ப்ரேரி வீடுகளில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, இவை பறிமுதல் செய்யப்பட்டன.

குற்றம் சாட்டப்பட்ட எட்டு பேர் மொத்தம் 33 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர். குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஐந்து பேர் பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்தவர்கள்.

எட்டு பேரில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்ற ஐந்து பேருக்கும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர்கள் கிராண்டே ப்ரேரி பிராந்தியத்தை விட்டு வெளியேறியதாக நம்பப்படுகிறது.

Tags :
|
|