Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இ-பாஸ் நடைமுறையில் தளர்வு...ஒரே நாளில் 1.20 லட்சம் பேருக்கு இ-பாஸ்

இ-பாஸ் நடைமுறையில் தளர்வு...ஒரே நாளில் 1.20 லட்சம் பேருக்கு இ-பாஸ்

By: Monisha Tue, 18 Aug 2020 09:27:47 AM

இ-பாஸ் நடைமுறையில் தளர்வு...ஒரே நாளில் 1.20 லட்சம் பேருக்கு இ-பாஸ்

மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல ஒரே நாளில் 1.20 லட்சம் பேருக்கு இ-பாஸ் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இ-பாஸ் நடைமுறை தளர்வு நேற்று முதல் அமலுக்கு வந்தது. அத்தியாவசிய காரணங்களுக்காக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல ஆன்லைனில் விண்ணப்பித்தோருக்கு உடனுக்குடன் இ-பாஸ் வழங்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

வெளி மாவட்டங்களில் இருந்து நேற்று ஏராளமானோர் வாகனங்களில் சென்னையை நோக்கி படையெடுத்தனர். இ-பாஸ் எளிதாக கிடைத்ததாலும், போலீஸ் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளின் கெடுபிடி இல்லாததாலும் மக்கள் மகிழ்ச்சியுடன் பயணம் மேற்கொண்டனர்.

e pass,online,travel,district,public ,இ பாஸ்,ஆன்லைன்,பயணம்,மாவட்டம்,பொதுமக்கள்

இந்நிலையில் தமிழகத்தில் விண்ணப்பித்த அனைவருக்கும் இ-பாஸ் என்ற நடைமுறை அமலுக்கு வந்த நிலையில், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல ஒரே நாளில் 1.20 லட்சம் பேர் இ-பாஸ் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags :
|
|
|