Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 26-ந் தேதி அலுவலகத்திற்கு வராத ஊழியர்களுக்கு சம்பளம், சலுகை கிடையாது - கே.சண்முகம் எச்சரிக்கை

26-ந் தேதி அலுவலகத்திற்கு வராத ஊழியர்களுக்கு சம்பளம், சலுகை கிடையாது - கே.சண்முகம் எச்சரிக்கை

By: Monisha Mon, 23 Nov 2020 08:15:24 AM

26-ந் தேதி அலுவலகத்திற்கு வராத ஊழியர்களுக்கு சம்பளம், சலுகை கிடையாது - கே.சண்முகம் எச்சரிக்கை

அகில இந்திய வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ள 26-ந் தேதி அலுவலகத்திற்கு வராத ஊழியர்களுக்கு சம்பளம், சலுகை கிடையாது என்று தலைமைச் செயலாளர் கே.சண்முகம் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து தலைமை செயலாளர் கே.சண்முகம் அனுப்பிய சுற்றறிகையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அகில இந்திய அளவில் 26-ந் தேதி வேலை நிறுத்த போராட்டம் நடத்த போவதாக சில மத்திய வர்த்தக சங்கங்கள், ஊழியர் சங்கங்கள் அறிவித்துள்ளன. இந்த நிலையில், மாநிலத்தில் உள்ள அங்கீகரிக்கப்படாத அரசு ஊழியர் சங்கம் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்து இருப்பதாக அரசுக்கு தகவல்கள் வந்துள்ளன.

இந்த சூழ்நிலையில் சில உத்தரவுகளை பிறப்பிக்க விழைகிறேன். அதன்படி, வேலை நிறுத்த போராட்டத்தை நடத்துவதாக உத்தேசிக்கப்பட்டுள்ள 26-ந் தேதி அன்று அரசு ஊழியர்கள் யாராவது அலுவலகத்திற்கு வராமல் இருந்தால் அது அங்கீகரிக்கப்படாத 'ஆப்செண்ட்' ஆக கருதப்படும்.

k. shanmugam,warning,salary,offer,strike ,கே.சண்முகம்,எச்சரிக்கை,சம்பளம்,சலுகை,வேலை நிறுத்த போராட்டம்

மேலும் பணி செய்யவில்லை, சம்பளம் இல்லை என்ற அடிப்படையில் அவர்களுக்கு அந்த நாளுக்கான சம்பளமும், சலுகையும் அளிக்கப்படாது. பகுதி நேர ஊழியர்கள், தினசரி ஊதியம் பெறுவோர், தொகுப்பூதியம் பெறுவோர் இது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டால் வேலையில் இருந்து நீக்கப்படுவார்கள்.

26-ந் தேதி அன்று மருத்துவ விடுப்பு தவிர, தற்காலிக விடுப்பு உள்ளிட்ட வேறு எந்த விடுப்பை எடுத்தாலும் அது அனுமதிக்கப்படாது. எனவே இதன் அடிப்படையில் 26-ந் தேதி அன்று அனைத்து துறை தலைவர்களும் தங்களின் கீழ் பணியாற்றும் ஊழியர்கள் அன்றைய தினம் அலுவலகத்திற்கு வருகை தந்துள்ள விவரங்களை தங்கள் துறை செயலாளர்களுக்கு 26-ந் தேதி காலை 10.15 மணிக்குள் அறிக்கையாக அனுப்பி விட வேண்டும்.

அந்த அறிக்கைகளை பெறும் அதிகாரிகள் அந்த அறிக்கைகளை தொகுத்து அன்று காலை 10.30 மணிக்குள் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறைக்கு அறிக்கையாக அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags :
|
|