Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 10-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த என்ஜினீயர் தலைமறைவு

10-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த என்ஜினீயர் தலைமறைவு

By: Monisha Sat, 21 Nov 2020 09:55:25 AM

10-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த என்ஜினீயர் தலைமறைவு

திருமண ஆசைவார்த்தை கூறி மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் மார்த்தாண்டம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமாரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த என்ஜினீயர் ஜான் பெனட் (வயது 22). இவர் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். ஜான்பெனட் தினமும் வேலைக்கு செல்லும் பஸ்சில், மார்த்தாண்டம் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவியும் சென்றுள்ளார்.

அப்போது அவர்களுக்கிடையே பழக்கம் ஏற்பட்டு அடிக்கடி பேசி வந்தனர். தற்போது, அந்த மாணவி 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் ஜான்பெனட் மாணவியை காதலிப்பதாகவும், அவரை திருமணம் செய்வதாகவும் ஆசை வார்த்தை கூறினார். அதைத்தொடர்ந்து இருவரும் காதலித்து வந்தனர்.

rape,engineer,absconding,prosecution,complaint ,பாலியல் பலாத்காரம்,என்ஜினீயர்,தலைமறைவு,வழக்குப்பதிவு,புகார்

கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவியின் தந்தை உடல்நலக்குறைவு காரணமாக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவருக்கு உதவியாக மாணவியின் தாயார் உடனிருந்தார். இதனால் மாணவி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இதனை அறிந்து, அங்கு வந்த ஜான்பெனட் மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் ஜான்பெனட் தலைமறைவாகி விட்டார்.

இதனையடுத்து மாணவி இதுகுறித்து மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பிரேமா வழக்குப்பதிவு செய்து ஜான்பெனட்டை வலைவீசி தேடி வருகிறார்.

Tags :
|