Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சிறப்பு ரயில்களுக்கு பயணச்சீட்டு முன்பதிவு செய்ய அவகாசம் நீட்டிப்பு

சிறப்பு ரயில்களுக்கு பயணச்சீட்டு முன்பதிவு செய்ய அவகாசம் நீட்டிப்பு

By: Nagaraj Fri, 29 May 2020 10:46:25 PM

சிறப்பு ரயில்களுக்கு பயணச்சீட்டு முன்பதிவு செய்ய அவகாசம் நீட்டிப்பு

அவகாசம் நீட்டிப்பு... சிறப்பு ரயில்களில் பயணிக்க டிக்கெட் முன்பதிவு செய்யும் அவகாசத்தை 30 நாட்களில் இருந்து, 120 நாட்களாக அதிகரித்து ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போதைய 4ம் கட்ட ஊரடங்கு வரும் மே 31ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனிடையே ஊரடங்கால் வெளிமாநிலங்களில் சிக்கியுள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலங்கள் செல்ல சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

railways,normal bookings,trains,tickets ,ரயில்வே, சாதாரண முன்பதிவு, ரயில்கள், டிக்கெட்

அதற்கான முன்பதிவு காலம் 30 நாட்களாக இருக்கிறது. இந்நிலையில், சிறப்பு ரயில்களில் பயணிக்க டிக்கெட் முன்பதிவு செய்யும் அவகாசத்தை 30 நாட்களில் இருந்து, 120 நாட்களாக அதிகரித்து ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. வரும் ஜூன் 1ம் தேதியில் இருந்து இயக்கப்படும் சிறப்பு ராஜ்தானி ரயில்கள் மற்றும் 200 சிறப்பு மெயில் எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு அவகாசம் 120 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த நடைமுறை வரும் 31ம் தேதி காலை 8 மணி முதல் அமலுக்கு வருகிறது. மற்ற ரயில்களில் சாதாரண முன்பதிவு மற்றும் தட்கல் முறையில் இருக்கும் இருக்கை ஒதுக்கீடு உள்ளிட்ட வசதிகள் ஏற்கனவே இருந்த நடைமுறையிலே தொடரும் என்று ரயில்வே தெரிவித்துள்ளது.

Tags :
|