Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • காங்கிரஸ் கட்சி கூறிய குற்றச்சாட்டுக்கு பதில் அளித்து கடிதம் எழுதியுள்ள ‘பேஸ்புக்’

காங்கிரஸ் கட்சி கூறிய குற்றச்சாட்டுக்கு பதில் அளித்து கடிதம் எழுதியுள்ள ‘பேஸ்புக்’

By: Karunakaran Fri, 04 Sept 2020 8:01:39 PM

காங்கிரஸ் கட்சி கூறிய குற்றச்சாட்டுக்கு பதில் அளித்து கடிதம் எழுதியுள்ள ‘பேஸ்புக்’

‘பேஸ்புக்’ மற்றும் ‘வாட்ஸ் அப்’ சமூக வலைத்தளங்கள் இந்தியாவில் ஆளும் கட்சியாக உள்ள பாரதீய ஜனதா கட்சிக்கு ஆதரவாக நடந்து கொள்ளும் நடத்தையை கொண்டிருப்பதாக அமெரிக்க பத்திரிகைகளான வால்ஸ்டிரீட் ஜர்னல், டைம் ஆகியவை சமீபத்தில் செய்தி வெளியிட்டன. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.

இந்திய ஜனநாயக செயல்முறை மற்றும் சமூக நல்லிணக்கத்தில் ‘பேஸ்புக்’ தலையிடுவதாகவும், ஆளும் பாரதீய ஜனதா கட்சி உறுப்பினர்களின் வெறுப்புணர்வு பேச்சில் விதிகளை மென்மையாக கையாள்வதாகவும் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது. பின்னர் இதுகுறித்து ‘பேஸ்புக்’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க்குக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் இருமுறை கடிதம் எழுதப்பட்டது.

facebook,letter,congress party,allegations ,பேஸ்புக், கடிதம், காங்கிரஸ் கட்சி, குற்றச்சாட்டுகள்

இந்நிலையில் ‘பேஸ்புக்’ நிறுவனத்தின் பொது கொள்கை, நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு பிரிவு இயக்குனர் நீல் பாட்ஸ் எழுதி உள்ள பதில் கடிதத்தில், காங்கிரஸ் கட்சி சார்பில் நீங்கள் எழுப்பிய கவலைகள், செய்துள்ள பரிந்துரைகளை நாங்கள் தீவிரமாக கவனத்தில் எடுத்துக்கொள்கிறோம். முதலில் நாங்கள் பாகுபாடற்றவர்கள் என்பதை கூற இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்கிறோம். எங்கள் தளங்கள் மக்கள் தங்கள் கருத்துகளை சுதந்திரமாக வெளிப்படுத்த முடிகிற தளங்களாக இருப்பதை உறுதி செய்ய முயற்சிக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், நாங்கள் பாரபட்சமாக நடந்துகொள்வதாக நீங்கள் கூறிய குற்றச்சாட்டுகளை தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம். எல்லா விதத்திலும் வெறுப்பையும், மத வெறியையும் நாங்கள் கண்டிக்கிறோம் என்பதை உறுதி செய்ய விரும்புகிறோம். நாங்கள் பாரபட்சமற்றவர்கள். மதம், சாதி, இனம், தேசிய வம்சவாளி உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட பண்புகளின் அடிப்படையில், மக்களுக்கு எதிரான தாக்குதல்களை எங்கள் தர நிலைகள் தடை செய்கின்றன என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறோம். வெறுப்புணர்வு பேச்சு கொள்கைக்கு ஏற்ப, எங்கள் தளங்களில் இந்தியாவில் உள்ள பொது நபர்களால் வெளியிடப்பட்ட உள்ளடக்கத்தை அகற்றி விட்டோம் என்று தெரிவித்துள்ளார்.

Tags :
|