Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வேளாண் மசோதாக்களுக்கு எதிராக விவசாயிகள் 3-வது நாளாக தீவிர போராட்டம்

வேளாண் மசோதாக்களுக்கு எதிராக விவசாயிகள் 3-வது நாளாக தீவிர போராட்டம்

By: Karunakaran Sun, 27 Sept 2020 09:22:24 AM

வேளாண் மசோதாக்களுக்கு எதிராக விவசாயிகள் 3-வது நாளாக தீவிர போராட்டம்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் மசோதாக்கள் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாக்கள் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதில் இருந்தே பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் விவசாயிகள் தங்களது போராட்டங்களைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

பஞ்சாப் மாநிலத்தில் கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டி தலைமையில் 30-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் ஒன்றிணைந்து ரெயில் மறியல் போராட்டத்தை நடத்தி வருகின்றன. கடந்த வியாழக்கிழமை முதல் 3 நாள் ரெயில் மறியல் போராட்டத்துக்கு மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டி அழைப்பு விடுத்தது. பஞ்சாப்பின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் தண்டவாளங்களில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

farmers,protest,agrarian bills,parliment ,விவசாயிகள், எதிர்ப்பு, விவசாய மசோதாக்கள், பாராளுமன்றம்

தற்போது இந்த ரெயில் மறியல் போராட்டம் நேற்று 3-வது நாளாக தொடர்ந்தது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் விவசாயிகள் ரெயில் தண்டவாளங்களில் அமர்ந்து மத்திய அரசுக்கு எதிராகவும் வேளாண் மசோதாக்களுக்கு எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பினர். அமிர்தசரஸ் நகரில் விவசாயிகள் மேலாடையின்றி அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் நேற்றுடன் முடிவதாக இருந்த இந்த ரெயில் மறியல் போராட்டத்தை மேலும் 3 நாட்களுக்கு நீட்டிப்பதாக மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டி அறிவித்துள்ளது. விவசாயிகளின் இந்த ரெயில் மறியல் போராட்டத்தால் மாநிலம் முழுவதும் ரெயில் சேவைகள் பெரும் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் போராட்டத்தால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.

Tags :