Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பதஞ்சலி நிறுவன கொரோனில் மருந்துக்கு நிபந்தனையுடன் மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் அனுமதி

பதஞ்சலி நிறுவன கொரோனில் மருந்துக்கு நிபந்தனையுடன் மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் அனுமதி

By: Nagaraj Wed, 01 July 2020 9:43:36 PM

பதஞ்சலி நிறுவன கொரோனில் மருந்துக்கு நிபந்தனையுடன் மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் அனுமதி

அனுமதி அளித்தது மத்திய அரசு... பதஞ்சலி நிறுவனத்தின் 'கொரோனில்' ஆயுர்வேத மருந்துக்கு மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளது.

கடந்த மாதம் 22ம் தேதி பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ் அறிமுகப்படுத்திய 'கொரோனில்' என்ற மருந்து குறித்து மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் பல கேள்விகளை எழுப்பியது. அதே நேரம் அதை விளம்பரம் செய்யவும் தடை விதித்தது.

condition,permit,central government,patanjali institute ,நிபந்தனை, அனுமதி, மத்திய அரசு, பதஞ்சலி நிறுவனம்

இந்நிலையில் கொரோனில் மருந்து கொரோனாவை குணமாக்கும் என்று சொல்லவில்லை. கொரோனா நோயாளிகள் அதை எடுத்துக் கொண்ட போது, அவர்களுக்கு குணம் கிடைத்தது என்றும் பதஞ்சலி நிறுவனம் நேற்று விளக்கம் அளித்தது.

இதையடுத்து அந்நிறுவனத்தின் 'கொரோனில்' மருந்தினை நோய் எதிர்ப்பு சக்தி ஊக்க மருந்தாக மட்டும் விற்றுக் கொள்ளலாம் என்று மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. மேலும் இது கொரோனாவை குணமாக்கும் மருந்து என கூறி விற்பனை செய்யக்கூடாது என்று நிபந்தனை விதித்துள்ளது.

Tags :
|