Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா காலத்துக்கு ஏற்ப பண்டிகைகளை உஷாராக கொண்டாட வேண்டும்; சுகாதாரத்துறை மந்திரி

கொரோனா காலத்துக்கு ஏற்ப பண்டிகைகளை உஷாராக கொண்டாட வேண்டும்; சுகாதாரத்துறை மந்திரி

By: Monisha Mon, 12 Oct 2020 08:56:39 AM

கொரோனா காலத்துக்கு ஏற்ப பண்டிகைகளை உஷாராக கொண்டாட வேண்டும்; சுகாதாரத்துறை மந்திரி

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று தற்போது குறைந்து வரும் சூழலில், நாடு முழுவதும் நவராத்திரி கொண்டாட்டம் வரும் 17-ந் தேதி தொடங்குகிறது. 26-ந் தேதி தசரா, அடுத்த மாதம் 14-ந் தேதி தீபாவளி, டிசம்பர் மட்டும் 25-ந் தேதி கிறிஸ்துமஸ் என பண்டிகைகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் கொரோனா காலத்துக்கு ஏற்ப பண்டிகைகளை உஷாராக கொண்டாட வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை மந்திரி டாக்டர் ஹர்சவர்தன் கூறியுள்ளார். இது தொடர்பாக மேலும் அவர் கூறியதாவது:-

பண்டிகைகளை அனைவரும் வீடுகளுக்குள்ளேயே, தங்களுக்கு அன்பானவர்களுடன் சேர்ந்து கொண்டாட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். பண்டிகையின் பெயரால் வெளியே கண்காட்சிகள், பந்தல்கள் என்று யாரும் செல்லக்கூடாது. இப்போது கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக போராடுவதுதான் அனைவரின் முதன்மையான தர்மமாக இருக்க வேண்டும். நாட்டின் சுகாதார மந்திரி என்ற வகையில் கொரோனா வைரஸ் தொற்றை தணிப்பதும், உயிரிழப்புகளை தடுப்பதும்தான் எனது தர்மமாக இருக்கிறது.

corona virus,festival,celebration,health,safety ,கொரோனா வைரஸ்,பண்டிகை,கொண்டாட்டம்,சுகாதாரத்துறை,பாதுகாப்பு

எந்த மதமும், எந்த கடவுளும் நீங்கள் ஆடம்பரமான முறையில்தான் பண்டிகைகளை கொண்டாட வேண்டும் என்றோ, பிரார்த்தனை செய்வதற்கு நீங்கள் பந்தல்களுக்கும், கோவில்களுக்கும்தான் செல்ல வேண்டும் என்றோ கூறவில்லை. எனவே பண்டிகை காலத்தில் மக்கள் எச்சரிக்கை உணர்வுடன் இருக்க வேண்டும்.

கொரோனா தடுப்பூசியின் அவசர கால பயன்பாட்டுக்கு மத்திய அரசு அங்கீகாரம் அளிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போது கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் முதலாவது, இரண்டாவது, மூன்றாவது கட்ட மருத்துவ பரிசோதனைகளில் உள்ளன. அவற்றின் முடிவுகளுக்காக காத்திருக்கிறோம்.

கொரோனா வைரஸ் ஒரு சுவாச வைரஸ். குளிர்கால நிலையில், இந்த வைரஸ்களின் பரவுதல் அதிகரிக்கும் என தெரிகிறது. குளிர்கால நிலை, குறைந்த ஈரப்பதம் உள்ள சூழலில் சுவாச வைரஸ்கள் நல்ல வளர்ச்சியை பெறுகின்றன. எனவே மனதில் அனைவரும் கொள்ள வேண்டிய ஒரு அம்சம் உண்டு. அது, குளிர்காலத்தில், குடியிருப்புகளில் அதிகமாக கூட்டம் கூடுகிறபோது பரவல் அதிகரிக்கலாம் என்பதுதான். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags :
|