Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சாத்தான்குளம் விவகாரத்தில் கைதான 5 பேர் மதுரை சிறைக்கு மாற்றப்பட்ட பின்னணி

சாத்தான்குளம் விவகாரத்தில் கைதான 5 பேர் மதுரை சிறைக்கு மாற்றப்பட்ட பின்னணி

By: Nagaraj Sun, 05 July 2020 5:43:06 PM

சாத்தான்குளம் விவகாரத்தில் கைதான 5 பேர் மதுரை சிறைக்கு மாற்றப்பட்ட பின்னணி

சிறைத்துறையினர் மீது புகார் சொன்ன ஸ்ரீதர்... சாத்தான்குளம் கொலை வழக்கில் 5 போலீசார் மதுரை சிறைக்கு மாற்றப்பட்டதில் பரபரப்பு பின்னணி வெளியாகியுள்ளது.

பேரூரணி சிறையில் ஆய்வாளர் ஸ்ரீதர் மிரட்டல் குறித்து உயர் அதிகாரிகளிடம் சிறை வார்டன்கள் புகார் அளித்துள்ளனர். ஜெயராஜ், பென்னிக்ஸ் இறப்புக்கு சிறைத்துறையே காரணம் என ஸ்ரீதர் கூறியதால் வார்டன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

inquiry,sridhar,authority,prison wardens,trauma ,விசாரணை, ஸ்ரீதர், அதிகாரம், சிறை வார்டன்கள், அதிர்ச்சி

தான் அடைக்கப்பட்டு இருந்த சிறைக் கதவை மூட எதிர்ப்பு தெரிவித்து ஸ்ரீதர் ரகளையில் ஈடுபட்டுள்ளார். அரசியல் பின்னணியை கூறி ஸ்ரீதர் அதிகாரம் செலுத்தியதால் சிறைக் காவலர்கள் திணறியுள்ளனர். உயர் அதிகாரிகள் நேரில் வந்து ஸ்ரீதரை சமாதானப்படுத்தியும் ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளார்.

சிறை பணியாளர்களுக்கு ஸ்ரீதர் கொடுத்த நெருக்கடியால் மதுரை சிறைக்கு மாற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் பென்னிக்ஸ் நண்பர்கள் 5 பேரிடம் சிபிசிஐடி விசாரணை நிறைவு பெற்றுள்ளது. நாளை மீண்டும் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Tags :