Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இரண்டரை மாத இடைவெளிக்கு பின்னர் பயிற்சியில் ஈடுபட்ட கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ

இரண்டரை மாத இடைவெளிக்கு பின்னர் பயிற்சியில் ஈடுபட்ட கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ

By: Nagaraj Thu, 21 May 2020 1:24:34 PM

இரண்டரை மாத இடைவெளிக்கு பின்னர் பயிற்சியில் ஈடுபட்ட கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ

72 நாட்கள் இடைவெளிக்குப் பிறகு கால்பந்தாட்ட நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ இத்தாலியின் கிளப் அணியான யுவண்ட்ஸ் கிளப் அணிக்கு திரும்பியுள்ளார். தொடர்ந்து அவர் பயிற்சியிலும் ஈடுபட்டார்.

மார்ச் மாதம் 8ம் தேதி ரொனால்டோவின் அணி, மிலன் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வ‍ென்றது. அதன்பிறகு கொரோனா காரணமாக போட்டித் தொடர் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், தனது சொந்த நாடான போர்ச்சுகலுக்கு புறப்பட்டு சென்றார் ரொனால்டோ. அங்கு தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.

ronaldo,italy,football tournament,permission,training,juventus team ,ரொனால்டோ, இத்தாலி, கால்பந்து போட்டி, அனுமதி, பயிற்சி, யுவண்டஸ் அணி

இதற்கிடையில் இத்தாலியில் மே 5ம் தேதி முதல் கால்பந்து பயிற்சிகளுக்கு அனுமதி தரப்பட்டது. வரும் ஜூன் மாதம் 14ம் தேதி முதல் ரசிகர்கள் அல்லாத போட்டிகளுக்கு அனுமதி தரப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மே மாத துவக்கத்திலேயே இத்தாலி திரும்பியிருந்த ரொனால்டோ, தன்னை 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டார். பின்னர் 72 நாட்கள் கழித்து, பயிற்சிக்காக காண்டிநாஸா மைதானத்திற்கு வருகை தந்தார். அங்கு, யுவண்டஸ் அணியின் வீரர்களுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டார்.

Tags :
|