Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அரையாண்டு தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படாது; அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

அரையாண்டு தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படாது; அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

By: Monisha Sat, 28 Nov 2020 11:48:23 AM

அரையாண்டு தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படாது; அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

அரையாண்டு தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படும் என்ற தகவல் தவறானது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளி-கல்லூரிகளை மூட கடந்த மார்ச் 16-ந்தேதி மத்திய அரசு உத்தரவிட்டது. பின்னர் 25-ந்தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டதால், இதுவரை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவில்லை. அதேநேரம் புதிய கல்வியாண்டு தொடங்கியதை தொடர்ந்து பல பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகின்றன.

கடந்த ஜூன் 8-ந்தேதி முதல் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பிய பின்னரும் இன்னும் ஒரு சில தளர்வுகள் அளிக்கப்படவில்லை. குறிப்பாக இதுவரை பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படவில்லை.

minister senkottayan,half yearly examination,online,schools,curriculum ,அமைச்சர் செங்கோட்டையன்,அரையாண்டு தேர்வு,ஆன்லைன்,பள்ளிகள்,பாடத்திட்டம்

இந்நிலையில் அரையாண்டு தேர்வு தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:-

தமிழகத்தில் பாடத்திட்டங்கள் குறைப்பு குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் நாளை மறுநாள் அறிக்கை வழங்கப்படும். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் அறிக்கை தந்த 5 நாளில் பாடத்திட்டங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும். அரையாண்டு தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படும் என்ற தகவல் தவறானது.

மேலும் தேர்தல் தொடர்பாக கூறுகையில், அதிமுக - பாஜக கூட்டணி வெற்றி பெறுவது மக்கள் கையில்தான் உள்ளது என்று தெரிவித்தார்.

Tags :
|