6 மாவட்டங்களில் கனமழை பெய்யலாம்; வானிலை ஆய்வு மையம் தகவல்
By: Nagaraj Tue, 15 Sept 2020 4:22:55 PM
கனமழைக்கு வாய்ப்பு... தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆந்திர கடற்பகுதியில் காக்கிநாடாவுக்கு அருகில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 2 நாட்களில் வடமேற்கு திசையில் நகரும்.
இதன் காரணமாக திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சேலம், நாமக்கல், விழுப்புரம்,
கள்ளக்குறிச்சி, கோவை, நீலகிரி மாவட்டங்களில், லேசானது முதல் மிதமான
மழையும், புதுவையில் லேசான மழையும் பெய்யக்கூடும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர், திருவள்ளூர், கிருஷ்ணகிரி,
தர்மபுரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மாவட்டங்களில் கனமழை
பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகரில் அடுத்த
48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும்,
நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.