Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ராகுல்காந்தியை சகோதரராக பெற்றதற்கு நான் பெருமைப்படுகிறேன் - பிரியங்கா காந்தி

ராகுல்காந்தியை சகோதரராக பெற்றதற்கு நான் பெருமைப்படுகிறேன் - பிரியங்கா காந்தி

By: Karunakaran Tue, 04 Aug 2020 12:37:49 PM

ராகுல்காந்தியை சகோதரராக பெற்றதற்கு நான் பெருமைப்படுகிறேன் - பிரியங்கா காந்தி

நேற்று நாடு முழுவதும் ரக்‌ஷா பந்தன் பண்டிகை கொண்டாடப்பட்டது. சகோதரத்துவத்தை போற்றும் வகையில் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையின் போது, தங்கள் உடன் பிறந்த சகோதரர்கள் அல்லது சகோதரராக நினைப்பவர்களுக்கு கையில் மஞ்சள் கயிறு கட்டுவர்.

ரக்‌ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஆகியோர் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா வெளியிட்டுள்ள ‘ரக்‌ஷா பந்தன்’ வாழ்த்து செய்தியில், ராகுல்காந்தி குறித்து பெருமிதமாக கூறியுள்ளார்.

rahul gandhi,brother,priyanka gandhi,raksha bandhan ,ராகுல் காந்தி, சகோதரர், பிரியங்கா காந்தி, ரக்ஷா பந்தன்

பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ள செய்தியில், அனைவருக்கும் ரக்‌ஷா பந்தன் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். ராகுல்காந்தியை சகோதரராக பெற்றதற்கு நான் பெருமைப்படுகிறேன். அவரைப் போன்றவர் சகோதரராக கிடைத்தது, நான் பெற்ற அதிர்ஷ்டம் என்று பெருமிதமாக கூறியுள்ளார்.

மேலும் அவர், எல்லா நல்லது, கெட்டதுகளிலும் ராகுல்காந்தியுடன் நான் இருந்துள்ளேன். உண்மை, பொறுமையுடன் வாழ்க்கையை வாழும் கலையை அவரிடம் இருந்து கற்றுக் கொண்டிருக்கிறேன் என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

Tags :