மதுரை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11,214 ஆக உயர்வு
By: Monisha Sat, 01 Aug 2020 12:25:28 PM
மதுரை மாவட்டத்தில் ஏற்கனவே 11,009 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று மேலும் 205 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது
தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 45 ஆயிரத்து 859 ஆக அதிகரித்துள்ளது. நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் சிகிச்சைக்கு பின் 1 லட்சத்து 83 ஆயிரத்து 956 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஆனாலும், தமிழகத்தில் இதுவரை கொரோனாவுக்கு 3 ஆயிரத்து 935 பேர் பலியாகி உள்ளனர்.
மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.
சென்னையை தொடர்ந்து செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் ஏற்கனவே 11,009 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று காலை நிலவரப்படி 205 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,214 ஆக உயர்ந்துள்ளது.
மதுரை மாவட்டத்தில் இதுவரை 8,423 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சிகிச்சை பலனின்றி 237 பேர் உயிரிழந்துள்ளனர்.