Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திருப்பதியில் 3 நாட்களில் ரூ.43 லட்சம் உண்டியல் காணிக்கை

திருப்பதியில் 3 நாட்களில் ரூ.43 லட்சம் உண்டியல் காணிக்கை

By: Nagaraj Sun, 14 June 2020 08:18:39 AM

திருப்பதியில் 3 நாட்களில் ரூ.43 லட்சம் உண்டியல் காணிக்கை

கொரோனா பொது முடக்கத்திற்கு பின் ஊரடங்கு தளர்வில் கடந்த 11ம் தேதி திருமலை ஏழுமலையான் கோவில் திறக்கப்பட்டது. இந்த மூன்று நாட்களில் உண்டியல் காணிக்கையாக ரூ. 43 லட்சம் கிடைத்துள்ளது என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக, திருமலை ஏழுமலையான் கோவிலில் மார்ச் 20 முதல், பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் 82 நாட்கள் பொது முடக்கத்திற்கு பின், இம்மாதம், 11ம் தேதி முதல், ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

undial,officer,corona,pilgrims,checkpoint ,உண்டியல், அதிகாரி, கொரோனா, பக்தர்கள், சோதனைச்சாவடி

கடந்த, 11, 12ம் தேதிகளில், 13 ஆயிரம் பேர் ஏழுமலையானை தரிசித்தனர். அவர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்திய தொகையை கணக்கிட்டதில் தேவஸ்தானத்திற்கு, 43 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது. தினமும் 2 முதல் 3 கோடி வரை வருமானம் கிடைத்து வந்த நிலையில், தற்போது, குறைவான பக்தர்களே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவதால், உண்டியல் வருவாயும் குறைந்துள்ளது.

இதற்கிடையில் திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவிலில் பணிபுரியும் அதிகாரி ஒருவருக்கு, கொரோனா தொற்று நேற்று உறுதியானது. அதனால், திருமலைக்கு செல்லும் தேவஸ்தான ஊழியர்கள் அனைவருக்கும் அலிபிரி சோதனை சாவடியில், கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. தற்போது, ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் வரத் துவங்கியுள்ளதால் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனையை தேவஸ்தானம் கட்டாயமாக்கியுள்ளது.

Tags :
|
|