Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னையில் கடந்த 7 நாட்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு

சென்னையில் கடந்த 7 நாட்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு

By: Monisha Mon, 28 Sept 2020 10:44:18 AM

சென்னையில் கடந்த 7 நாட்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கில் தற்போது பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது. இந்த நிலையில் சென்னையில் கொரோனா வைரஸ் பரவல் கடந்த சில நாட்களாக 950 முதல் ஆயிரம் என்ற எண்ணிக்கையில் இருந்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் கடந்த 7 நாட்களில் 0.1 சதவீதம் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி இணையதள பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:- சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மணலி மண்டலத்தில் 6.3 சதவீதமும், தேனாம்பேட்டை மண்டலத்தில் 3.7 சதவீதமும், சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 2.4 சதவீதமும், வளசரவாக்கம் மண்டலத்தில் 2.1 சதவீதமும், பெருங்குடியில் 1.8 சதவீதமும், ராயபுரத்தில் 0.9 சதவீதமும், தண்டையார் பேட்டை மண்டலத்தில் 0.7 சதவீதமும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.

chennai,corona virus,infection,treatment,corporation ,சென்னை,கொரோனா வைரஸ்,பாதிப்பு,சிகிச்சை,மாநகராட்சி

அதேபோல் அண்ணாநகர், அம்பத்தூர் மண்டலத்தில் தலா 0.1 சதவீதமும், கோடம்பாக்கம் மண்டலத்தில் 0.2 சதவீதமும், அடையாறு மண்டலத்தில் 0.4 சதவீதமும், திரு.வி.க. நகர் மண்டலத்தில் 0.7 சதவீதமும், மாதவரம் மண்டலத்தில் 1.3 சதவீதமும், திருவொற்றியூர் மண்டலத்தில் 2 தவீதமும், ஆலந்தூர் மண்டலத்தில் 6.8 சதவீதமும் பாதிப்பு குறைந்துள்ளது.

சென்னையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களில் 60.21 சதவீதம் பேர் ஆண்கள், 39.79 சதவீதம் பேர் பெண்கள். மேலும் 9 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 2.05 சதவீதமும், 10 முதல் 19 வயதுக்கு உட்பட்டவர்கள் 5.92 சதவீதமும், 20 முதல் 29 வயதுக்கு உட்பட்டவர்கள் 17.74 சதவீதமும், 30 முதல் 39 வயதுக்கு உட்பட்டவர்கள் 18.70 சதவீதம் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் 40 முதல் 49 வயதுக்கு உட்பட்டவர்கள் 17.72 சதவீதமும், 50 முதல் 59 வயதினர் 18.50 சதவீதமும், 60 முதல் 69 வயதினர் 11.69 சதவீதமும், 70 முதல் 79 வயதினர் 5.53 சதவீதமும், 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் 2.15 சதவீதமும் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்று சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :